
பெண்ணின் அப்பா: வாங்கோ வாங்கோ உட்காருங்கோ. லச்சு மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாரும் வந்துட்டா பாரு.
மாப்பிள்ளையின் அப்பா: நமஸ்காரம் சுப்பிரமணியன். நான் பையனோட அப்பா கேசவன் இவ தான் என் ஆத்துக்காரி ராஜம் பையனோட அம்மா.
பெண்ணின் அப்பா: உங்க ஆத்துக்காரின்னா பையனோட அம்மா தானே…ஹா!ஹா!ஹா!
மாப்பிள்ளையின் அப்பா: அவசியம் அப்படி இருக்கணுமா என்ன? ஹா! ஹா! ஹா! பயந்துட்டேளோ!!
பெண்ணின் அப்பா: லச்சு நம்ம பொண்ணு சரசுவை அழைச்சுண்டு வந்துடு மா.
மாப்பிள்ளையின் அத்தை: முன்னெல்லாம் பொண்ணைப் பார்த்தா மூக்கும் முழியுமா நல்லா லட்சணமா இருக்கான்னு சொல்லுவா…ஆனா இப்போ என்னன்னு சொல்லறது? முகத்தில் பாதியும் மாஸ்க் மறைச்சுண்டிருக்கே!!!!
மாப்பிள்ளையின் அப்பா: பொண்ணு மாஸ்க்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு சொல்லிண்டா போறது. காலத்துக்கு ஏத்தா மாதிரி டைலாக்கை மாத்திக்கோங்கோளேன்.. ஹா! ஹா! ஹா!
– பார்வதி நாராயணன்