அத்தியாயம் 39: இன்றைய செலவும் எதிர்காலத் திட்டமும்

அந்த வார சனிக்கிழமை நவீன் மிருதுளா பேசிக் கொண்டது போலவே தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்றார்கள். கையிலிருந்த பணத்திற்கேற்ப இருவரின் பெற்றோருக்கும் ஒரே மாதிரியான புடவை, சட்டை, பேன்ட் பிட் வெவ்வேறு வண்ணங்களில் ஒரே விலையில் எடுத்தார்கள். பின் தம்பிகளுக்கு  ஆளுக்கு ஒரு சட்டை அன்ட்  டிஷர்ட் மற்றும் பேன்ட் பிட் என எடுத்து விட்டு அன்று மத்திய உணவிற்கு அந்த மார்க்கெட்டிலிருக்கும் ஃபேமஸ் லக்ஷ்மி டாபாவிற்குள் சென்று அமர்ந்து ஆர்டர் கொடுத்ததும்….

“நவீ நான் எடுத்திருக்கும் டிரெஸ் எல்லாம் உங்க ஆத்துல எல்லாருக்கும் பிடிக்கும் இல்ல. நல்லா இருக்கு தானே.”

“எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்திருக்க அப்புறம் எப்படி நல்லா இல்லாம போயிடும் மிருது. எனக்கு நீ செலக்ட் பண்ணின எல்லா டிரெஸும் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டும் வந்திருந்தா இவ்வளவு கடை எல்லாம் ஏறி இறங்கிருக்க மாட்டேன். மொதோ கடையில என்ன இருக்கோ அதுலேந்து ஏதாவதை எடுத்துண்டு வந்திருப்பேன். நீ வயத்துல நம்ம பாப்பாவையும் வச்சுண்டு இந்த வெதர்ல அலைஞ்சு இதெல்லாம் வாங்கிருக்க.. உனக்கு அந்த டவுட்டே வேண்டாம். சரி சாப்பிடு”

“ஓகே இனிமே டவுட் பட மாட்டேன்”

“ஆமாம் எல்லாருக்கும் எடுத்த நமக்கு ஏன் ஒண்ணுமே எடுக்கலை?”

“எனக்கு கல்யாணத்துக்கு எடுத்த புடவைகளே புதுசா அப்படியே இருக்கு அதுனால எடுக்கலை. எங்க அப்பா அம்மா வேற ஜுன் மாசம் வந்தப்போ நமக்கு டிரெஸ் எடுத்துண்டு வந்தா இல்லையா அது வேற புதுசா அப்படியே இருக்கு அதனால தான் நமக்கு எடுக்கலை.”

“ஓ ஓகே”

“ஓ அப்ப நான் வேண்டாம்ன்னு சொன்னா அப்படியே ஓகேன்னு சொல்லி விட்டுவிடுவேங்கள் இல்ல. சரி சரி”

“ஹலோ மேடம் நான் ஃபர்ஸ்ட் கேட்டதே நமக்கு ஏன் எடுக்கலைன்னு தான். நீ சொன்னது எனக்கு கரெக்ட்டா பட்டுது அதனால ஓகே சொன்னேன். இப்போ இப்படி கேட்டா நான் என்ன சொல்லுவேன்? சரி வா சாப்பிட்டுட்டு போய் உனக்கும் ஒரு புடவை எடுத்துண்டு வருவோம்.”

“அய்ய ஒண்ணும் வேண்டாம்.  நம்ம கிட்ட இருக்கிற பணத்துக்கு இதோட நிறுத்திண்டோன்னா ஊருக்கு போற வரைக்கும் காசு இருக்கும் புரிஞ்சுதா புருஷா? ஆமாம் நான் ஒண்ணு உங்கள்ட்ட கேட்கணும்ன்னு ரொம்ப நாளா மனசில நினைச்சிண்டிருக்கேன்”

“என்ன கேளு!”

“இல்ல ஆத்துக்கு போயிட்டு கேட்கறேன். நான் மறந்துட்டேனா ஞாபகம் படுத்துங்கோ கேட்கறதுக்கு”

இருவருமாக பேசிக்கொண்டே சாப்பிட்டு பின் வீட்டிற்கு சென்றார்கள். காலை முதல் மதியம் மூன்று மணி வரை நடந்ததில் மிகவும் களைத்து போய் வீட்டிற்குள் வந்ததும் டிரெஸ் மாற்றிவிட்டு உடனே படுத்து தூங்கிவிட்டாள் மிருதுளா.

நவீன் வாங்கி வந்ததை எல்லாம் டேபிளில் அடுக்கி வைத்து விட்டு டிவியில் சத்தம் கம்மியாக வைத்து தரையில் படுத்து பார்த்துக் கொண்டே அப்படியே தூங்கிப்போனான். 

மாலை ஐந்து மணிக்கு மிருதுளா எழுந்துப் பார்த்தாள் டிவி ஒடிக்கொண்டிருந்தது. நவீன் தரையில் படுத்துறங்குவதை பார்த்து மெதுவாக கட்டிலிலிருந்து இறங்கி டிவியை ஆஃப் செய்துவிட்டு முகம், கை, கால் கழுவுவதற்கு பாத்ரூம் சென்றாள். அவள் பாத்ரூம் கதவை சாத்தும் சத்தம் கேட்டு எழுந்தான் நவீன். 

மிருதுளா ஃப்ரெஷாகி வந்து பார்த்தாள் நவீன் கண்களை விழித்துக்கொண்டு சும்மா படுத்திருந்தான். 

“எழுந்துண்டேளா. சரி போய் ஃப்ரெஷ்ஷாகி வாங்கோ அதுக்குள்ள நான் விளக்கேத்திட்டு காபி போட்டு தரேன்”

நவீனும் ஃப்ரெஷ்ஷாகி வந்து நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு விட்டு ஹாலில் அமர்ந்தான். மிருதுளாவும் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். 

“மிருது என்கிட்ட ஏதோ ஆத்துக்கு வந்ததுக்கப்பறம் கேட்கணும்னோ இல்ல சொல்லணும்ன்னோ ரெஸ்டாரன்ட்ல  சொன்ன ஆனா வந்ததும் தூங்கிட்ட!”

“ஆமாம் பா ரொம்ப டையர்டா இருந்தது அதுனால தான் படுத்ததும் தூங்கிட்டேன்”

“சரி இப்போ ஞாபகம் படுத்திட்டேனே சொல்லு”

“நான் சொல்லறதை தப்பா எடுத்துக்க கூடாது நம்மளோட நல்லதுக்கு தான் சொல்லறேன் அதுல உங்களுக்கு இஷ்டம் இல்லாட்டி நேரடியா சொல்லிடுங்கோ நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..இதுக்கு சரின்னு சொன்னா நான் சொல்ல வேண்டியதை சொல்லறேன்”

“அம்மாடி என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கே. சரி சரி சொல்லு “

“இந்த வேலையில் வரும் சம்பளம் நமக்கே பத்த மாட்டேங்கறது இல்லையா”

“ஆமாம்”

“இன்னும் அஞ்சு மாசத்துல நமக்குன்னு ஒரு குழந்தை வந்திடும் அன்ட் நம்ம ஃபேமிலி கொஞ்சம் பெரிசாகும் இல்லையா”

“ஆமாம் அதுக்கென்ன?”

“அப்போ செலவும் ஜாஸ்த்தியாகும். இந்த சம்பளம் எப்படி பத்தும். நம்ம லதா அக்காக்கு ஆர் நம்ம பல்பீருக்கு அப்புறம் உங்க நண்பர்கள் சதீஷ், ரமேஷ் இவா எல்லாருக்கும் வயல், வீடுன்னுட்டு ஒரு பேக்கப் இருக்கு அதுனால அவா சமாளிக்க முடியறது. ஆனா நமக்கு ஒண்ணுமில்லை இந்த மாத சம்பளத்தை நம்பி தான் இருக்கணும்”

“ஆமாம் யூ ஆர் ரைட்”

“நீங்களும் பத்து வருஷம் சம்பாதிச்சும் ஒரு வீடு வாசல் இல்லை …அது பரவாயில்லை”

“ஏன் இல்லை? இப்போ அப்பா அம்மா இருக்கறது நான் லோன் போட்டு வாங்கின வீடாக்கும்”

“அப்படியா?”

“ஆமாம்”

“சரி அது இருக்கட்டும். நீங்க இத்தனை வருஷமா சம்பாதிச்சது உங்கள் படிப்புக்கும், உங்கள் குடுப்பத்துக்கும், நம்ம கல்யாணத்துக்குமே செலவாயாச்சு. கையில் நையா பைசா கூட இல்லாம அடுத்த மாத சம்பளத்தை எதிர்ப்பாத்து தான் என்னை கல்யாணம் பண்ணி கூட கூட்டிண்டும் வந்தேங்கள்”

“ஆமாம். இது எல்லாம் தெரிந்த விஷயம் தானே மிருது. நானும் சொல்லிட்டேனே அதுக்கென்ன இப்போ?”

“இந்த வேலை நல்ல வேலை தான். நான் இல்லன்னு சொல்லலை. வீடு தர்றா, கேன்டீன் ஃபெசி‌லிட்டி இப்படி எல்லாமிருக்கு தான் ஆனா நம்ம எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.”

“சரி அதுக்கு என்ன பண்ணறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்”

“இல்ல நீங்க ஏன் வேற வேலைக்கு முயற்சி பண்ணக் கூடாது? இந்த வேலைல சேரும்போது வெறும் ப்ளஸ்டூ தான் படிச்சிருந்தேங்கள் சரி. ஆனா இப்போ தான் நீங்க இவ்வளவு படிச்சிருக்கேங்களே அப்புறமும் ஏன் வெளியே ட்ரை பண்ணக்கூடாதுன்னு எனக்கு தோனறது. அதை தான் உங்கள்ட்ட கேட்கணும் ன்னு இருந்தேன் கேட்டுட்டேன்”

“இங்க பாரு மிருது…நீ சொல்லறது எல்லாமே சென்ட் பெர்சன்ட் அக்செப்ட் பண்ணிக்கறேன். ஆனா நீ ஒண்ணு யோசிக்க தவறிட்ட.”

“என்ன அது?”

“நான் என் குடும்ப கஷ்டத்துக்காக தான் இந்த வேலையில் சேர்ந்தேன். இல்லன்னு சொல்லலை. ஆனா இப்போ பதினோரு வருஷம் சர்வீஸ் ஆயாச்சு இன்னும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு நாலு வருஷம் இங்கேயே வேலை செய்தால் லைஃப் லாங் பெனிஃபிட் கிடைக்கும் தெரியுமா”

“அது என்ன பெனிஃபிட்?”

“நான் சர்வீஸில் ஜாயின் பண்ணின புதுசுல எவ்வளவு அடி, பனிஷ்மென்ட் எல்லாம் வாங்கி கஷ்ட்டப்பட்டிருக்கேன் தெரியுமா!!! அப்படி கஷ்ட்டப்பட்டு பதினோரு வருஷம் முடிச்சாச்சு ஜஸ்ட் ஒரு நாலு வருஷம் கழிச்சு அதாவது பதினைந்து வருடம் சர்வீஸ் முடிச்சிட்டா நமக்கு லைஃப் லாங் கவர்மென்ட் பென்ஷன் வரும். இங்க அந்த பதினைந்து வருட சர்வீஸ் நமக்கு வாழ்நாள் முழுவதுக்கும் பாதுகாப்பு தரும் அதுனால தான் நானும் வெயிட் பண்ணறேன் அந்த வெயிட்டிங் டைம்ல என்னோட குவாலிஃபிக்கேஷன்ஸையும் இம்ப்ரூவ் பண்ணிண்டிருக்கேன் புரியறதா!?”

“ஓ அப்படி ஒண்ணு இருக்கா!!! சாரி எனக்கு அது தெரியாது. அப்படிப் பார்த்தா நீங்க சொல்லறதும் சரி தான். சரி அப்போ இன்னும் ஒரு நாலு வருஷம் வெயிட் பண்ணிட்டா போறது”

“தாங்க்ஸ் மிருது என்னோட கஷ்டத்தை உன் மீது சுமத்திட்டும் நீ எனக்காக யோசிக்கற அன்ட் விட்டுக் கொடுக்கற தாங்கிக்கவும் செய்ற.”

“இதெல்லாம் வார்த்தைல மட்டும் இருந்தா போதாது கணவா வாழ்க்கையிலும் என்றும் இருக்கணும் ஓகே”

“நிச்சயம் இருக்கும் மை லார்டு. சரி இப்போ நாம வாக் போகலாமா?”

தொடரும்….

2 Comments

Leave a comment