
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் பெற்று எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்பும்
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை
தினமும் எண்ணாவிட்டாலும் அது பெற்ற
தினத்திலாவது எண்ணிப்பாருங்கள்
திடீரென கிடைத்ததல்ல என்பது புரியும்
எத்தனை எத்தனை போராட்டங்கள்
எத்தனை எத்தனை தியாகங்கள்
எத்தனை எத்தனை உயிரிழப்புகள்
எத்தனை எத்தனை இழப்புகள்
அத்தனையையும் சுயநலத்தால்
அத்தனையையும் அதிகாரத்தால்
அத்தனையையும் பணத்தாசையால்
அத்தனையையும் பேராசையால்
அத்தனையையும் ஊழலால்
மெல்ல மெல்ல அழித்து விட்டு
மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்
நம்மவர்களுக்கே அடிமையாகி
பெற்ற சுதந்திரத்தை தாரை வார்த்துவிட்டு
சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன்
என்று அலுத்துக் கொள்வதோ
அதற்கு சுதந்திரம் இல்லை
இதற்கு சுதந்திரம் இல்லை
என போராட்டத்தில் ஈடுபடுவதோ
எந்த விதத்தில் நியாயம்!!!!