கண்களுக்கு தெரியாத கொரோனா என்ற நச்சுயிர்
நம்முள் ஊடுருவி
நம் உடல் உறுப்புக்களை தன்வசப்படுத்தி நம்மையே எதிர்க்க செய்து
நம்முயிர் குடிக்க ஆவலாக இருப்பது போல்
கண்களுக்கு நன்றாக தெரிகின்ற மனிதர்கள்
நம்முடனே பயணிக்கின்றவர்கள்
நச்சுயிரின் பிரதிநிதிகள் போல் பல செயல்களை செவ்வனே செய்து வருகின்றனர்
கொரோனாவிற்கு கூட தடுப்பு மருந்து
கண்டுபிடித்து விடலாம்
மனித கொரோனாக்களை தடுக்க மருந்தேதும் இருந்தால்
மனிதம் காக்கப்படும்.