
ஆட்டோ வில் செய்தித்தாள் படித்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தவருக்கும் ஆட்டோக்காருக்கும் இடையே நடந்த உரையாடல்
“என்ன சார் நியூஸ் இன்னிக்கு”
“அமைச்சர்களை எல்லாம் பதம் பார்த்த கொரோனா இப்போ நம்ம தலைவரையே பதம் பார்க்க போவுது போல”
“ஏன் சார் தலைவருக்கு மா! வந்துடுச்சு?”
“தெரியலையேப்பா டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்”
“இருக்கா? போயிடுச்சா? சார்?”
“எத …யாரை… கேக்கறே”
“கொரோனா வ தான் பின்ன தலைவரையா!!!! ச்சசச …ஏன்னா நம்ம ஆளுங்களப்பத்தி நமக்குத்தானே நல்லா தெரியும்…. கொரோனாக்கிட்டயே கம்மிஷன் கேட்டோ இல்ல அதுல அவங்க ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லியோ துன்புறுத்தி அத தொறத்தி கிறத்தி விட்டுட்டாங்களோனு கேட்டேன்”
“அந்த வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா? கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”
“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”
“எப்படி?”
“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு ஸ்டிக்கராலேயே அழிவு னு”
“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது”
