வானவில்லின் ஏழு நிறங்களை ரசிக்கிறார்கள்
வண்ணமயமான மலர்களை கண்டு புத்துணர்வு பெறுகிறார்கள்
வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களில் மெய்சிலிர்க்கிறார்கள்
உடைகளை பல வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறார்கள்
மனிதர்களிலும் உண்டு பல நிறத்தவர்கள்
இதை ஏன் ஏற்க மறுக்கிறது சில உள்ளங்கள்
மனகண்களை திறந்து வைப்போம்
அனைத்து நிரங்களையும் ரசிப்போம்