மையின் சாரல்கள் பக்கம் வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். பல நேரங்களில் நமக்குள் பல கேள்விகள் உதித்து நம்மை அவற்றின் விடைகளை தேட வைக்கும். ஏன், எப்படி, என்று நமக்குள் நாமே கேட்டுக்கொண்டிருப்போம். இப்படி நம்முள்ளே பலருக்கும் விடை கிடைத்தும், கிடைக்காமலும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழே பகிர்ந்துள்ள குட்டி கதையை படிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில்களை படிக்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தோழி.
ராமு ஒரு நாள் பத்து விதைகள் வாங்கி வந்தான். அவற்றை தனித்தனியாக நட்டு வைத்து நீர் விட்டு பராமரித்து வந்தான். சில நாட்களில் எட்டு செடிகள் முளைத்தது. முளை விடாத இரண்டு விதைகளை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து வேறு ஒரு இடத்தில் விதைத்தான். அவ்விரண்டு விதைகளும் செடியாக வளர்ந்தது. ராமு சந்தோஷமடைந்தான்.
முதலில் முளைவிடாத இரண்டு விதைகள் ராமு அவற்றின் இடத்தை மாற்றிய பின் செடியானது. இதிலிருந்து நாம் எதை தெரிந்து கொள்வது…
விதைகள் செடியானது ….ராமுக்கு விதைகள் மேலிருந்த நம்பிக்கை காரணமா அல்லது
விதைகளின் இடம் மாற்றம் காரணமா?
