வாழ்க்கை

வாழ்க்கை ரசிப்பதற்க்கே….

அதி காலை வானத்தை துளைத்து வரும் முதல் கதிர் முத்துக்கள்

மலைகளின் மேல் சற்று ஓய்வெடுத்து பயணிக்க ஆயத்தம் ஆகும் மேகங்கள்

காலை பனித்துளியில் சிளிர்த்து சோம்பல் முறித்து துளிர்க்கும் செடி, கொடி, மரங்கள்

நாணத்தால் பாதி மலர்ந்தும், இயற்கையால் முழுவதுமாக விரிந்து மலர்ந்த மலர்கள்

கோழியின் கூவல், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சலசலப்பு என்று நாளை துவங்கும் விலங்குகள் மற்றும் பறவைகள்

காலையில் நீர் தெளித்த வாசலில் வெள்ளை அரிசி மாவினால் பளிச்சிடும் அழகான கோலங்கள்

சுட சுட ஆவி பறக்கும் காபி அதனுடன் ஜோடியாக துடிக்கும் செய்தித்தாள்கள்

மகிழ்வுடன் நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிரும் காலை வணக்கங்கள்

இவை யாவுமே நமது தினசரி மகிழ்ச்சியான தருணங்களின் மணி முத்துக்கள்

வாழ்க்கையை ரசித்தால் நீயும் கவியே

வாழ்க்கை வாழ்வதற்க்கே…..

எளிமையை  எழுச்சிக்கு வித்தாக்கி

வலிகளை வலிமைக்கு வித்தாக்கி

பொருமையை அணுகுமுறைக்கு வித்தாக்கி

முயற்சியை லட்சியத்துக்கு வித்தாக்கி

பாசத்தை அன்புக்கு வித்தாக்கி

வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்வதற்க்கே …

வாழ்க்கை  பூச்செண்டு அல்ல அது ஒரு பூங்காவனம் 

வாழ்க்கை  வணிகம் அல்ல அது ஒரு வரம்

வாழ்க்கை வீழ்வதற்க்கல்ல வாழ்வதற்க்கே

நம் வாழ்க்கை நம் கையில்

ரசித்து வாழ்வோம்! வாழ்வை ரசிப்போம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s