அன்பை சுரப்பது தான் இதயம்
அன்பு சுரக்கா விட்டால் அழிந்திடும் மனிதநேயம்.
இதயமே உன்னை ஆராதிக்கிறேன்
உன்னாலே அன்பை சுவாசிக்கிறேன்.
இதயமே நீ பழுதானால் உண்டு மாற்று அறுவை சிகிச்சை
அதனால் நீ விடு உன் பெரும் மூச்சை.
இதயமே நீ காதலுக்கு ஒரு போதும் சொந்தம் இல்லை
இருந்திருந்தால் அம்பு விட்டு உன்னை கிழித்து கொடுப்பார்களா தொல்லை.
இதயமே உன்னை பேணி காப்பவர்களுக்கு நீ சிறந்த உழைப்பாளி
நீ இருப்பதை மறந்து வாழ்பவர்களுக்கு கொடுப்பாய் வலி
இதயமே உன்னை மக்களவையில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தாகிவிட்டது
தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவருக்கும் தெரிந்திடும் நீ இருப்பது.